இந்தோனீசியாவைச் சென்றடைந்த 130க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள்

ஜகார்த்தா: சுமார் 130க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று, இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 அக்டோபரில் கிட்டத்தட்ட 2,000 ரோஹிங்யா அகதிகள் அச்சே மாநிலத்தைச் சென்றுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அகதி நிறுவனத்தின் (யுஎன்ஹெச்சிஆர்) தரவு காட்டுகிறது.

அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுவதாலும்,முறைகேடுகளுக்கு ஆளாவதாலும் பல ஆண்டுகளாக இந்த அகதிகள் மியன்மாரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அவர்கள் இந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்க, கடல் சற்று அமைதியாக இருக்கும் நவம்பர், ஏப்ரல் மாதங்களில் இந்தோனீசியாவிற்கும் மலேசியாவிற்கும் படகுகளில் பயணம் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

பண்டார் அச்சே நகரில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், டிசம்பர் 2023இல் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் வசிக்கும் மாநாட்டு மையத்திற்கு சென்று அவர்களை நாடுகடத்துமாறு வலியுறுத்தினர்.

இச்சம்பவத்தை, “கும்பல் தாக்குதல்” என்று ஐக்கிய நாடுகளின் தூதரகம் அழைத்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு மியன்மாரிலிருந்தும் பங்ளாதேஷிலிருந்தும் தப்பிச் செல்ல முயன்றபோது, குறைந்தது 569 ரோஹிங்கியாக்கள் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!