காவல்துறையைக் குழப்பிய குறும்புக்கார மைனா

சொன்னதைச் சொல்லுமாம் கிளைப்பிள்ளை என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம்.

மனிதர்களின் மொழியைப் பேசாவிட்டாலும் சில பறவைகள் கேட்கும் ஒலியை அப்படியே திருப்பி எழுப்பும் திறன் பெற்றுள்ளன.

அப்படி ஒரு குறும்புக்காரப் பறவை அண்மையில் பிரிட்டனில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

‘ஸ்டார்லிங்’ எனப்படும் அந்த மைனா வகைப் பறவை காவல்துறை வாகனத்தின் ‘சைரன்’ எச்சரிக்கை ஒலியைப் போன்றே சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தேம்ஸ் வேலி பிரிவு காவல்துறை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் ஏதோ கோளாறு என்று சிறிது நேரம் குழம்ப நேரிட்டது. அந்த அளவிற்கு அது துல்லியமாக ஒலி எழுப்பியதாக பிபிசி தெரிவித்தது.

தேம்ஸ் வேலி காவல்துறை, இதுதொடர்பான காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தங்கள் அதிகாரிகளுக்கான பயிலரங்குகளைக் கவனித்து அந்த மைனா அவ்வாறு செய்வதாக அது குறிப்பிட்டுள்ளது.

‘ஸ்டார்லிங்’ பறவைகள் போலியாகக் குரலெழுப்புவதில் வல்லவை என்று கூறப்படுகிறது. பிற பறவைகளின் குரலொலி மட்டுமன்றி இயந்திரங்களின் சத்தம், மோட்டார் சைக்கிள் ஒலி போன்றவற்றையும் கவனித்து அவை துல்லியமாக அதேபோன்ற ஒலியை எழுப்புவதுண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!