எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து, 2,000த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்திலுள்ள மவுன்ட் லெவொடோபி லாகி-லாகி என்ற அந்த எரிமலை அண்மைய வாரங்களில் பலமுறை குமுறியது.

புத்தாண்டு நாளன்று ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு அது சாம்பலைக் கக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் 2ஆம் தேதியும் அது குமுறியதாகப் பதிவானது.

லெவொடோபி எரிமலை வெடிப்பால் ஃபிரான் சேடா விமான நிலையம் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது. அவ்விமான நிலையம், எரிமலையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த டிசம்பரில் சுமத்ரா தீவிலுள்ள மவுன்ட் மெராப்பி எரிமலை வெடிப்பால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தோனீசியாவில் கிட்டத்தட்ட 130 எரிமலைகள் உயிர்ப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!