நாக்பூர்: இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல் ரூபாய் நோட்டு ஒழிப்பு. இதற்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார் ப.சிதம்பரம். "ரூபாய் நோட்டு ஒழிப்பு ஏழைமக்களின் முதுகெலும்பை ஒடித்துள்ளது. இவ்வளவு துயரங்களைத் தேசிய பேரிடர் கூட ஏற்படுத்தி இருக்கமுடியாது. இது அபத்தமான ஒன்று. இது ஒரு சிந்தனையற்ற நடவடிக்கை. உலகில் உள்ள வேறு யாருக்கும் இதற்கு ஒரு நல்ல வார்த்தை கூற முடியாது. நாட்டின் முக்கிய பத்திரிகைகளும் பொருளியல் நிபுணர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பால் நாட்டிற்கு எப்படி நன்மை கிடைக்கும். ஊழல், கறுப்புப் பணத்தை ஒழித்து விட்டதா என்றால் அவ்வாறு அதை அது செய்யவில்லை. இதனால் ஏழை மக்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். இப்போது அவர்கள் பணமில்லா பொருளியல் என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
ப.சிதம்பரம்: இவ்வாண்டின் மிகப்பெரிய ஊழல் குறித்து விசாரணை வேண்டும்
14 Dec 2016 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2016 07:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!