பேங்காக்: கிழக்கு தாய்லாந்தில் 12 பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, 15 பயணிகளுடன் சென்ற மினிவேன் ஆகியவை நேருக்கு நேர் மோதியதில் தீப்பற்றிக் கொண்டன. இந்த விபத்தில் 25 பேர் பலியாகினர். இறந்தவர்களுள் இருவர் பச்சிளங் குழந்தைகள். பயணிகள் நிறைந்திருந்த மினி வேனின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த பயணிகள் லாரி மீது மோதியதும் இரு வாகனங் களும் தீப்பற்றி எரிந்ததாக போலிசார் தெரிவித்தனர். வாக னங்களில் பற்றிய தீ, மோதலினால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றால் பயணிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. இரு பயணிகள் பலத்த காயங்களுடன் தப்பினர். ஓரளவுக்கு நல்ல உள்கட் டமைப்பு வசதிகள் இருந்தபோதும், சாலை விபத்துகளில் உயிரிழப் போரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகிலேயே இரண் டாவது அபாயகரமான சாலை களைத் தாய்லாந்து கொண்டிருப்ப தாக உலக சுகாதார நிறுவனத் தின் 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
நேருக்கு நேர் மோதி தீப்பற்றிக் கருகிய வாகனங்களில் பயணம் செய்த 27 பேரில் இருவர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர். படம்: தி நேஷன்