ஜெய்ப்பூர்: பசுக் காவலர்கள் பலரால் தமிழக கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நால்வர் கைதாகியுள்ளனர். தமிழக அதிகாரிகள் நல்ல ரக பசுமாடுகள் வாங்கவே ராஜஸ்தான் சென்றிருந்தனர். அங்குள்ள ஜெய்சல்மீர் பகுதியில் பசுக்களை வாங்கிய பின்னர் தமிழகம் திரும்ப தயாராகினர். எனினும் இத்தகவலை முழுமையாக அறியாத பசுக் காவலர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர், தமிழக அதிகாரிகளைத் திடீரென வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் பசு, கன்றுகளை ஏற்றிச் சென்ற லாரிக்கும் அவர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் 4 பேர் மட்டும் ராஜஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அதிகாரிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் சிலருக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.
பசு மாடுகள் வாங்கச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது கடும் தாக்குதல்
14 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2017 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
பௌத்த ஆலயங்களுக்குப் படையெடுத்த பக்தர்கள்
மே 23, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
ஆட்டம் கண்ட எஸ்கியூ321, மாற்று விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்த பயணிகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!