13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன வைர மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் மாது

அல்பெர்ட்டா: கனடாவில் ஒரு மாது 13 ஆண்டுகளுக்கு முன்பு அவரது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைத்து விட்டார். அந்த மோதிரம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தோட்டத்தில் விளைந்த ஒரு கேரட்டில் அந்த மோதிரம் சிக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது 84 வயதாகும் திருமதி மேரி கிராம்ஸ் என்ற அந்த மாது தனது வைர மோதிரம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் அந்த மாதின் மருமகள், அவர்களின் தோட்டத்தில் விளைந்த கேரட்டை மண்ணி லிருந்து வெளியில் எடுத்து சுத்தம் செய்தபோது அந்த கேரட்டின் நடுப்பகுதியில் ஒரு மோதிரம் சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த் திருக்கிறார். திருமதி மேரி 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் புற்களை அகற்றும்போது வைர மோதிரத்தை தொலைத்து விட்டார். 1951ஆம் ஆண்டு அவரது கணவர் நூர்மான் அவருக்கு கொடுத்த மோதிரம் அது. அந்த மோதிரம் காணாமற் போனதை தன் கணவரிடம் அவர் கூறவே இல்லையாம். அதுபற்றி கூறினால் கணவர் சினம் கொள்வார் என்று நினைத்து அதை மறைத்து விட்டாராம். அந்த மோதிரம் போன்று குறைந்த விலையில் மற்றொரு மோதிரத்தை வாங்கிய தாக அந்த மாது கூறினார்.

திருமதி மேரி 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த ஒரு மோதிரம், கேரட் நடுவில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. படம்: டுவிட்டர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!