அல்பெர்ட்டா: கனடாவில் ஒரு மாது 13 ஆண்டுகளுக்கு முன்பு அவரது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைத்து விட்டார். அந்த மோதிரம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தோட்டத்தில் விளைந்த ஒரு கேரட்டில் அந்த மோதிரம் சிக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது 84 வயதாகும் திருமதி மேரி கிராம்ஸ் என்ற அந்த மாது தனது வைர மோதிரம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் அந்த மாதின் மருமகள், அவர்களின் தோட்டத்தில் விளைந்த கேரட்டை மண்ணி லிருந்து வெளியில் எடுத்து சுத்தம் செய்தபோது அந்த கேரட்டின் நடுப்பகுதியில் ஒரு மோதிரம் சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த் திருக்கிறார். திருமதி மேரி 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் புற்களை அகற்றும்போது வைர மோதிரத்தை தொலைத்து விட்டார். 1951ஆம் ஆண்டு அவரது கணவர் நூர்மான் அவருக்கு கொடுத்த மோதிரம் அது. அந்த மோதிரம் காணாமற் போனதை தன் கணவரிடம் அவர் கூறவே இல்லையாம். அதுபற்றி கூறினால் கணவர் சினம் கொள்வார் என்று நினைத்து அதை மறைத்து விட்டாராம். அந்த மோதிரம் போன்று குறைந்த விலையில் மற்றொரு மோதிரத்தை வாங்கிய தாக அந்த மாது கூறினார்.
திருமதி மேரி 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த ஒரு மோதிரம், கேரட் நடுவில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. படம்: டுவிட்டர்