மாறி மாறி முறைத்துக்கொண்ட சம்பவங்கள் ஒருவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தும் அளவுக்குக் கொண்டு சென்றன. பகுதி நேரமாக வண்ணம் பூசும் வேலை செய்து வந்த திரு பாங் கோக் பெங், 58, என்ற ஆடவரைப் பலமுறை கத்தியால் குத்திய ஆலன் இயோ ஹூய் ஹுவாட், 66, என்ற வேலையில்லா ஆடவருக்கு 43 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திரு பாங்கும் ஆலனும் பல ஆண்டுகளாக அருகருகே வசித்து வந்தனர். இருந்தாலும் இருவரும் அவ்வப்போது முறைத்துக்கொள்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இதேபோல கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, சாய் சீ அவென்யூ புளோக் 38ன் கீழ்த்தளத்திலுள்ள பொதுவெளியில் அமர்ந்திருந்த ஆலன் திரு பாங்கை முறைத்துப் பார்த்துள்ளார். அதைக் கண்ட திரு பாங், "ஏன் முறைத்துப் பார்க்கிறாய்?" என்று ஆலனிடம் கேட்டுள்ளார். இதையடுத்து தான் வைத்திருந்த பழக் கத்தியால் ஆலன் திரு பாங்கைப் பலமுறை குத்தியதாகக் கூறப்பட்டது.
முறைத்துப் பார்த்ததால் கத்திக்குத்து
7 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Oct 2017 07:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!