வில்சன் சைலஸ்
நாள் முழுக்க பெய்த மழையிலும் சிறப்புடன் நடந்தேறியது தீமிதித் திருவிழா. மாரியம்மன் ஆலயத்தில் காலையில் 10 மணிக்கு தீக் குழிக்கான விறகுகளை எரிக்கத் தொடங்கியபோது மழை பெய்த தால், மேலே தகரம் போட்டு தீ அணையாமல் பார்த்துக்கொண் டனர். தீமிதியின்போதும் மழைக்கு தயார்நிலையில் ஏற்பாட்டுக் குழுவினர் இருந்தனர். நல்லவேளை யாக இரவு 8.00 மணி அளவில் மழை முற்றாக நின்றுவிட்டது. மாலை சுமார் 6.45 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் தயாரான கரகத்துடன் இரவு 9 மணியளவில் சவுத் பிரிட்ஜ் சாலையின் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்த தலைமை பண்டாரத்தைத் தொடர்ந்து ஏறக் குறைய 4,500 ஆண் பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
அவரைத் தொடர்ந்து பக்தர்கள் தீயில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அதைதொடர்ந்து பெண் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தீக்குழியை வலம் வந்தனர்.
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் தலைமை பண்டாரம் பூக்குழியில் இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். படம்: த. கவி