குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் விமான நிலைய தளவாடப் பூங்கா அலுவலகத்தின் 6542 8976 என்ற எண்ணிலிருந்து மோசடி அழைப்புகள் வந்ததாக பொது மக்களில் சிலர் தெரிவித்து உள்ளனர். வழக்கு அல்லது விசாரணையில் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் தொடர்பில் பணம் அனுப்பவேண்டும் என்று அந்த அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பாளர் கேட்டதாகக் கூறப்பட்டது. தனது அதிகாரிகள் அப்படி எந்த அழைப்பையும் மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் அப்படி யாரேனும் அழைத்தால் தனிப்பட்ட தகவல்களை அளிக்கவோ அல்லது பணப் பரிமாற்றம் செய்யவோ வேண்டாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அத்தகைய அழைப்புகள் ஏதேனும் வந்தால் அது பற்றி 1800-255 0000 என்ற போலிசின் நேரடி அழைப்பு எண்ணுக்கோ அல்லது www. police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் மூலமோ தகவல் தருமாறும் அவசர உதவி தேவைப்பட்டால் '999' என்ற எண்ணில் போலிசை அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மோசடி அழைப்பு குறித்து எச்சரிக்கை
3 Nov 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Nov 2017 08:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!