வாஷிங்டன்: டெக்சஸ் மாநிலத் தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற டெவின் பாட்ரிக் கெல்லி பற்றிய கடந்த கால குற்றப் பின்னணி பற்றிய தகவல்களை தேசிய குற்றவியல் தகவல் நிலையத்தில் பதிவு செய்ய அமெரிக்க விமானப் படை தவறியது குறித்து புலன் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப் படை முன்னாள் ஊழியரான டெவின் கெல்லி 2012ஆம் ஆண்டு அவனது மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தியதற்காக நீதிமன்றம் அவனுக்கு தண் டனை விதித்தது.
அத்துடன் அவன் துப்பாக்கிகள் வாங்கு வதற்கோ அல்லது வைத்திருப் பதற்கோ தடையும் விதிக்கப் பட்டது. இருந்தும் சென்ற ஆண்டு அவனால் துப்பாக்கி வாங்க முடிந்திருக்கிறது. அந்த துப்பாக்கியை பயன்படுத்தியே அவன் ஞாயிற்றுக்கிழமை டெக்சஸ் மாநில தேவாலயத் தில் தாக்குதல் நடத்தியிருக் கிறான். 26 பேரைக் கொன்று விட்டு அவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். பின்னர் அவனது காரில் அவன் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர். அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தானா, அல்லது உள்ளூர்வாசி அவனது துப்பாக்கியைப் பறித்து அவனை சுட்டதால் உயிரிழந்தானா என்பது உறுதியாகத் தெரிய வில்லை என்று போலிசார் கூறினர்.