பணியிலிருந்த போக்குவரத்து போலிசார் ஒருவரை இடித்து விட்டு பலத்த காயம் உண்டாக் கிய 'மசராட்டி' பந்தயக் கார் ஓட்டுநர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நேற்று முன் தினம் இரவு 9.20 மணிக்கு பிடோக் ரெசர்வோர் சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது. 33 வயதான லீ செங் யான் (படம்), 26 வயது போலிஸ் அதி காரி கைருல் அன்வாரை தான் ஓட்டி வந்த காரைக் கொண்டு இடித்துள்ளார்.
அந்த காரின் கதவுப் பகுதியைப் பிடித்துக் கொண்டே 100 மீட்டர் வரை வந்த அதிகாரி பிறகு சாலையில் விழுந்துகிடந்தார். பலத்த காயங்களுடன் அதிகாரி சாங்கி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பிடோக் போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப் பட்டுள்ள லீ, மற்ற சில குற்றங் களிலும் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகிறது. நீதிபதி யிடம் பிணை கோரிய லீயிடம், அடுத்த வாரம் வரும்படி நீதிபதி கூறினார். சீடார் அவென்யூவில் காரை விட்டுச் சென்ற லீயை கேலாங் பாரு சாலையில் உள்ள அவரது வீட்டில் போலிசார் சம்பவம் நடந்த அன்று கைது செய்துள் ளனர். மீண்டும் நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் லீ தோன்றுவார்.