போலிசாரை இடித்துவிட்டு தப்ப முயன்ற பந்தயக் கார் ஓட்டுநர் குற்றம் சாட்டப்பட்டார்

பணியிலிருந்த போக்குவரத்து போலிசார் ஒருவரை இடித்து விட்டு பலத்த காயம் உண்டாக் கிய 'மசராட்டி' பந்தயக் கார் ஓட்டுநர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நேற்று முன் தினம் இரவு 9.20 மணிக்கு பிடோக் ரெசர்வோர் சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது. 33 வயதான லீ செங் யான் (படம்), 26 வயது போலிஸ் அதி காரி கைருல் அன்வாரை தான் ஓட்டி வந்த காரைக் கொண்டு இடித்துள்ளார்.

அந்த காரின் கதவுப் பகுதியைப் பிடித்துக் கொண்டே 100 மீட்டர் வரை வந்த அதிகாரி பிறகு சாலையில் விழுந்துகிடந்தார். பலத்த காயங்களுடன் அதிகாரி சாங்கி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பிடோக் போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப் பட்டுள்ள லீ, மற்ற சில குற்றங் களிலும் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகிறது. நீதிபதி யிடம் பிணை கோரிய லீயிடம், அடுத்த வாரம் வரும்படி நீதிபதி கூறினார். சீடார் அவென்யூவில் காரை விட்டுச் சென்ற லீயை கேலாங் பாரு சாலையில் உள்ள அவரது வீட்டில் போலிசார் சம்பவம் நடந்த அன்று கைது செய்துள் ளனர். மீண்டும் நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் லீ தோன்றுவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!