தீச்சம்பவங்கள் 2017ல் குறைந்தன

மின் ஸ்கூட்டர்களில் தீப்பற்றிய சம்பவங்கள் சென்ற ஆண்டு அதிகரித்திருந்தாலும் தீச்சம்பவங் களுக்காக வந்த அழைப்புகள் குறைந்துள்ளன. அவசர மருத்துவ சேவைகளுக் கான அழைப்புகள் அதிகரித்திருந்த தாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை நேற்று வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரி வித்திருந்தது. கடந்த ஆண்டில் நாற்பது மின் ஸ்கூட்டர்கள் தீப்பற்றின. அதற்கு முந்தைய ஆண்டில் அந்த எண் ணிக்கை ஒன்பதாக இருந்தது என்று குடிமைத் தற்காப்புப் படை யின் பேச்சாளர் கூறினார். அவை தீப்பற்றிக் கொண்டதற்கு மின் னேற்றிகளே காரணம் என்று தெரி விக்கப்பட்டது.

ஸ்கூட்டர்களில் உள்ள மின் னேற்றிகளில் சக்தி மிகுந்த பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள தால் அவை எளிதில் தீப்பற்றிக் கொள்கின்றன என்று கூறப்பட்டு உள்ளது. அவற்றில் அதிகப்படியான தாக்கம் ஏற்பட்டாலோ அவற்றை அதிக நேரம் மின்னேற்றினாலோ மின்சார இணைப்பு பழுதாகியிருந் தாலோ தீப்பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதன் விளைவாக பொருள் சேதமும் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப் பட்டது. ஒட்டுமொத்தமாக தீச்சம்பவங் கள் குறித்து வந்த அழைப்புகள் சென்ற ஆண்டு 3,871ஆக இருந் தது. 1978ஆம் ஆண்டிலிருந்து இது ஆகக் குறைவான எண்ணிக்கை. 2016ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,114ஆக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!