கோவை: தமிழகத்தில் தற்போது புதிதாக அரசியலில் நுழைந்திருக் கும் நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் பாரதிய ஜனதா கட்சியின் தயாரிப்புகளே என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், காவிரி விவகா ரத்தில் நிலவும் சிக்கல்களுக்கு மத்திய அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் அந்த அணியில் இருந்து விலகுவதாக வும், இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இனி இலக்கிய மேடைகளில் தன்னை அடிக்கடி பார்க்க முடியும் என்று குறிப்பிட்டிருந்த அவர், நேற்று கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் கமல், ரஜினி இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு தயாரிப்புகள் என்றார். "காவிரிப் பிரச்சினையில் தமி ழகத்துக்கு நல்ல தீர்வு அளிக்கக் கோரி எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.
இன்றளவு இப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் வகையில் தீர்வு கிடைக்க தாமதமாவதற்கு மத்திய அரசே காரணம். "கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படு கிறது. தமிழகத்தில் இருப்பதோ நிழல் அரசு," என்றார் நாஞ்சில் சம்பத். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கும் உரிய நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அண்ணா, திராவிடத்தை அலட்சியப்படுத்தி விட்டதால் தினகரன் கூர் இல்லாத அம்பு போலாகிவிட்டார். "சின்னச் சின்ன ஆதாயங்க ளுக்காக விலை போகிறவன் நானல்ல. "ஆதாயம் தேடும் அரசி யல்வாதியும் அல்ல. நான் சொற் பொழிவாளன்," என்றார் நாஞ்சில் சம்பத்.
நாஞ்சில் சம்பத். படம்: தமிழகத் தகவல் ஊடகம்