கோமா நிலையிலும் சுகப்பிரசவம்; பெண் குழந்தையைப் பெற்ற தாய்

பெய்ஜிங்: மூன்று மாதக் கருவை சுமந்தபடி கோமா நிலைக்குச்சென்ற மாது ஒருவர் ஆரோக்கியமான பெண் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். கருவுற்றிருந்தபோது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதை அடுத்து ஷாவோ சையான் எனும் அந்தப் பெண் கோமா நிலைக்குச் சென்றார். சிசு நலமாக இருந்தது கண்டறியப்பட்டதால் கருவானது கலைக்கப் படவில்லை. தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், பின்னர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். திருவாட்டி ஷாவோவுக்கு குழந்தை பிறந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அவர் இன்னும் கோமா நிலையிலேயே இருக்கிறார். மிகவும் இக்கட்டான நிலையிலும் குழந்தை நலமாகப் பிறந்ததுபோல ஷாவோவும் குணமடையும் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!