குளிர்பானங்கள் அருந்துவதை குறைப்பதற்கு ஊக்கப்படுத்தும் தண்ணீர் குடிக்கும் பிரசாரத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள் ளது. ஆரோக்கிய உணவு தயா ரித்தல், சமைத்தலுக்கான போட்டி களையும் அரசாங்கம் நடத்தும். சிங்கப்பூரில் நீரிழிவுக்கு எதிரான போரில் அரசாங்கம் வழிநடத்த விருக்கும் முயற்சிகளில் இவை ஒரு சில. முதன்முறையாக அமைக்கப் பட்ட சிறப்பு மக்கள் குழு சென்ற ஜனவரி மாதம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு சுகாதார அமைச்சு கருத்துரைத்துள்ளது. வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் இந்தத் தகவல்கள் வெளியிடப் பட்டன. நீரிழிவை தடுப்பது குறித்தும் அதை சமாளிப்பது குறித்தும் சமூகத்தின் வெவ்வேறு பிரிவு களைச் சேர்ந்த 76 பேர் அடங்கிய குழு 28 பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. அவற்றில் 14 சுகாதார அமைச் சால் ஏற்றுகொள்ளப்பட்டது. 13 பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஆரோக்கிய உணவு தெரிவு களைக் கொண்டு உணவுக் கடைகளை மதிப்பீடு செய்யும் பரிந்துரையை அமல்படுத்துவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது. பல்வேறு வகைகளில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதால் அவ்வாறு மதிப்பிட முடியாது என்றும் கூறப்பட்டது. நாள்பட்ட நோய் நிர்வாக திட்டத்தின்கீழ் $400 வருடாந்தர 'மெடிசேவ்' வரம்பை உயர்த்தவும் குழு பரிந்துரைத்தது. சென்ற மாத வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அந்தத் தொகை $500ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வேறு சில பரிந்துரைகளை எவ்வாறு அமல்படுத்துவது என் பதைப் பற்றி ஆராய வேண்டி உள்ளது என்று சுகாதார அமைச்சின் துணைச் செயலாளர் நியாம் சியூ யிங் கூறினார். இந்தப் பரிந்துரைகள் செயல் படுத்தப்பட்டாலும் அவற்றின் பயன் தெரிவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.