கோலாலம்பூர்: ஜோகூரில் காம்பிர் சட்டமன்றத் தொகுதியில் பிரிபூமி பெர்சத்துக் கட்சியின் தலைவரான முகைதின் யாசின் போட்டியிட இருக்கிறார். அத்தொகுதியில் போட்டியிடுவது பற்றி திரு முகைதின் நேற்று முன்தினம் அறிவித்தார். காம்பிர் தொகுதி உள்ளூர் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தபோது தான் போட்டி யிடுவதற்கு இது சிறந்த இடம் என்று அவர்கள் கூறியதாக திரு முகைதின் யாசின் கூறினார். இங்கு தமக்கு நல்ல ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார். பாகோ நாடாளுமன்றத் தொகுதி யில் அவர் மீண்டும் போட்டி யிடுவாரா என்ற கேள்வி எழுப்பப் பட்டபோது அது குறித்து கருத் துரைக்க அவர் மறுத்து விட்டார்.
திரு முகைதின் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பாகோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்து வந்துள்ளார். திரு முகைதின் 2016ஆம் ஆண்டு அம்னோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். காம்பிர் தொகுதி மொத்தம் 20,975 வாக்காளர் களைக் கொண்டது. இங்கு மலாய் வாக்காளர்கள் 58 விழுக் காட்டினரும் சீன வாக்காளர்கள் 40 விழுக்காட்டினரும் இந்திய வாக்காளர்கள் 1.5 விழுக் காட்டினரும் உள்ளனர். ஜோகூர் சட்டமன்றம் கடந்த வாரம் கலைக்கப்படும் வரையில் காம்பிர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் அசோகன் ஆவார். காம்பிர் சட்டமன்ற தொகுதியில் மஇகா வின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு கடந்த 2004ஆம் ஆண்டு, 2008ஆம் ஆண்டு 2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அசோகன் வெற்றி பெற்றார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளருடன் போட்டி யிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.