சிங்கப்பூரர்களில் 1.6 மில்லியன் பேருக்கு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டுகள், மெடி சேவ் கணக்கில் பணம் நிரப்புதல் என $1 பில்லியன் மதிப்பிலான சலுகைகள் விரைவில் கிடைக்க வுள்ளன என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்தது. தகுதிபெறும் கிட்டத்தட்ட 1.39 மில்லியன் சிங்கப்பூரர்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் $300 மதிப்புள்ள ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக் குத் தாங்கள் தகுதியானர்களா என்று குறுஞ்செய்தி மூலம் தெரி விக்கப்படுவார்கள்.
65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சுமார் 485,000 சிங்கப் பூரர்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச் சீட்டு-மெடிசேவ் பணம் நிரப்புதல் என $450 மதிப்புள்ள சலுகை யைப் பெறுவார்கள். 2018ல் 59 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 520,000 சிங் கப்பூரர்களுக்கு $200 மெடிசேவ் பணம் நிரப்புதல் கிடைக்கும். இவ்வாண்டில் 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ஆண்டிறுதியில் $300 எஸ்ஜி போனஸ் கிடைக்கும்.