ஐநா அமைப்பின் பாரபட்சத்திற்கு எதிரான உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று மலேசியா முடிவு செய்துள்ளது. அந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து அதை வரவேற்று கொண்டாடி மகிழ்வதற்காக மலாய் சார்பு அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் நேற்று கோலாலம்பூரில் மெர்டேக்கா சதுக்கத்தில் பேரணி ஒன்றை நடத்தின. முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ தலைவர் ஹமிடி, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட சுமார் 50,000 பேருக்கும் அதிகமானோர் பேரணி யில் திரண்டனர். பேரணிக்கு மலாய்=முஸ்லிம் குடிமைச் சமூக அமைப்புகள் ஏற் பாடு செய்திருந்தபோதிலும் அதை அம்னோ, பாஸ் ஆகிய இரண்டு மலாய்=முஸ்லிம் எதிர்த்தரப்பு கட்சிகளே வழி நடத்தின. அனைத்து வகை இன பாரபட் சங்களையும் அகற்றுவதற்கான ஐநாவின் உடன்பாட்டை எதிர்த்து பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த முதலில் உத்தேசிக்கப்பட்டது.
மலேசிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோலாலம்பூரில் மெர்டேக்கா சதுக்கத்தில் நடந்த பேரணியில் 50,000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி