ஸ்போர்ட்ஸ் ஹப் அமைப்பின் சமூக விளையாட்டு தினம், முதல் தடவையாக நேற்று ஓசிபிசி கூடத்தில் நடந்தது. குடும்பங் களாகச் சேர்ந்து மக்கள் கலந்து கொள்ள ஏதுவாக பல நடவடிக்கை களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந் தன. ஓசிபிசி கூடத்தில் இருக்கும் ஆறு அரங்குகளிலும் 20க்கும் அதிகமான விளையாட்டு நடவடிக் கைகள் இடம்பெற்றன. சிங்கப்பூரின் தேசிய விளை யாட்டாளர்கள், உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்கள் ஆகியோ ருடன் கலந்துறவாடி அவர்களி டமிருந்து பயனுள்ள விளையாட்டு தந்திரங்களையும் முறைகளையும் கற்றுக்கொள்ள இந்த நிகழ்ச்சி மூலம் நேற்று 10,000க்கும் அதிக மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
விளையாட்டு வீராங்கனை நூர் ஃபஸ்லின் ஜுமான் (இடது), தலைமையில் அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ (வலது) நேற்று ஓசிபிசி கூடத்தில் நடந்த ஸ்போர்ட்ஸ் ஹப் சமூக விளையாட்டு தினத்தில் சிலாட் தற்காப்புக் கலை பயின்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்