நலமாக உள்ளார் பாடகி எஸ்.ஜானகி

நலமாக உள்ளார் பாடகி எஸ்.ஜானகி

1 mins read
7afc38e9-697a-4332-9009-c7e9007bdfa8
-

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி நலமாக இருப்பதாக அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜானகியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவியது. சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தனது தாயார் ஜானகிக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அதையடுத்து அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் மகன் முரளிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

"ஜானகி அம்மா தவறிவிட்டதாக தவறான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. பாடகர் எஸ்.பி. பாலா தொலைபேசி வழி ஜானகி அம்மாவின் குடும்பத்துடன் பேசியுள்ளார்.

"ஜானகி அம்மா நலமாக இருக்கிறார். யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்," என இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கேட்டுக்கொண்டுள்ளார்.