கோலிவுட்: பிரபல திரைப்பட நடிகர் சரத் பாபு மாண்டுவிட்டதாக புதன்கிழமை (3 மே) இரவு தகவல் வெளியானது.
செய்தி வெளியான சிறிது நேரம் கழித்து சரத் பாபு உயிருடன் இருப்பதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்களும் வெளியாயின.
வதந்திகளை நம்பவேண்டாம் என்று சரத் பாபுவின் மகன் ஆயுஷ் தேஜஸ் கேட்டுக்கொண்டார்.
அவரின் உடல்நலம் மேம்பட சிறிது காலம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் ஆயுஷ் தேஜஸ் குறிப்பிட்டார்.
பல பிரபல தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சரத் பாபு.
80களிலும் 90களிலும் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் துணைக் கதாநாயகனாகவும் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.