பொது இடத்தில் சீனர்களின் தலைகள் பாலம் ஒன்றின் மீது நடப்பட்ட கழிகளில் தொங்கிய நிலையில் இருக்கும்.
1941ல் தெற்கு மலாயாவிலுள்ள கோத்தா திங்கி பகுதிக்கு அருகிலுள்ள ரப்பர் மரத் தோட்டப் பகுதியில் வசித்த ஒன்பது வயது கமலம் சுப்பையா (வலது படம்) இந்தக் கோரக் காட்சியை நினைவுகூர்ந்தார்.
“தொப்பிகளை மாட்டுவது போல மனிதத் தலைகளை மாட்டி வைத்தி ருப்பார்கள். ரத்தமெல்லாம் கீழே சிந்திக்கொண்டிருக்கும்,” என்று இப்போது 90 வயதாகியுள்ள திருமதி கமலம் கூறினார்.
தோல் வெண்மையாக இருந்த தம் அண்ணனைப் பார்க்க சீனரைப் போல இருந்ததால் ஒருமுறை ஜப்பானியர்கள் அவரைப் பிடித்துச் சென்றபோது தமது தந்தை மன்றாடியதால் அவரை விட்டுவைத்ததாக திருமதி கமலம் கூறினார்.
தமிழகத்தின் வேலூரில் பிறந்து ஒரு வயதாக இருந்தபோது தமது பெற்றோருடன் அண்ணன் மற்றும் அக்காவுடனும் மலாயாவை அடைந்தார்.
“ஜப்பானிய வீரர்கள் சீனர்களைப் பிடித்துக் கொன்றதை நேரில் பல முறை பார்த்துள்ளேன். பிணமாக நடித்து தப்பிக்க முயன்றவர்களையும் கண்டுபிடித்துக் கொல்வார்கள்,” என்று அவர் கூறினார்.
ஜப்பானியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீண்டும் திரும்பியபோது 1955ஆம் ஆண்டில் புதிதாகப் பிறந்த ஒரு மகளுடன் அத்தம்பதியர் மலேசியாவின் கோத்தா திங்கியி லிருந்து சிங்கப்பூருக்கு வந்து, புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.
தற்போது ஜூரோங்கில் வசித்து வரும் இத்தம்பதியருக்கு ஆறு பிள்ளைகள், 11 பேரப் பிள்ளைகள், 2 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.