ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய சுதந்திர வேட்கை

ஜப்­பா­னிய ஆட்­சிக் காலம் துயர்­மிகுந்­த­தாக இருந்­தா­லும், கால­னித்­துவ ஆட்சி முடி­வுக்­கு­வர இரண்­டாம் உல­கப் போர் ஒரு கார­ண­மாக இருந்­தது என்று கூறும் 94 வயது திரு வைர­வன் சுதர்­மன் அப்­போது பதின்­ம­வ­ய­துச் சிறு­வன்.

போர்­வி­மா­னங்­கள் பறக்­கும்­போது பதுங்­க­வேண்­டும் என்ற கட்­டளை இருந்­தா­லும், அவை வானில் பறப்­பதை மற்ற சிறு­வர்­களு­டன் ரசித்த பரு­வம்.

தமி­ழ­கத்­தின் சிவ­கங்கை மாவட்­டம், திரு­ம­ண­வ­யல் எனும் ஊரில் 1928ஆம் ஆண்டு பிறந்த திரு சுதர்மன், பத்து வய­தில் குடும்­பத்­தைப் பிரிந்து, தாய்­மாமா பெரு­மாள் மண்­டோ­ரு­டன் மலா­யா­வுக்­குக் கப்பல் ஏறி­னார். கோலா பில்லாவில் அரசாங்க வேலை­யி­லி­ருந்த மாமா­வுடன் குவாட்டர்சில் தங்கினார்.

காலை­யில் ஆங்கி­லப்பள்­ளி­யில் ஆங்­கி­ல­மும் மாலை­யில் கோலா பில்லா முரு­கன் கோயி­லில் தமி­ழும் படித்­தார். அச்­ச­ம­யத்­தில் தொழி­லா­ளர்­க­ளு­டன் வேலையும் பார்த்த தாகக் கூறிய அவர், “சிறு­வர்­களுக்கு அப்­போது நாள் சம்­ப­ளம் 35 காசு­­தான்,” என்­றார்.

“ஆண்­க­ளுக்கு 50 காசு, பெண்­க­ளுக்கு 45 காசு. தமி­ழர் மிகுந்த சிர­மங்­களை அனு­ப­வித்த காலம் அது. அது போர் மேகம் திர­ளத் தொடங்­கி­யி­ருந்த காலம்,” என்­றார் அவர்.

அப்­போது, குளு­வாங் ரயில் நிலை­யத்­தில் எதேச்­சை­யாக இந்­திய தேசிய ராணு­வத்­தின் (ஐஎன்ஏ) ஜோகூர் மாநி­லத் தலை­வ­ரான மாப்­பா­ணம் பிள்­ளை­யைச் சந்­தித்­தார். இலங்­கைத் தமி­ழ­ரான மாப்­ப­ணம் பிள்ளை, சுதர்­ம­னுக்கு வேலை கொடுத்­த­தோடு தமது வீட்­டிலே தங்க இட­மும் கொடுத்­தார். அவர் மீண்­டும் மாமா வீட்­டுக்­குப் போன சம­யத்­தில் போர் தொடங்­கி­யது.

சுற்றி வாழ்ந்த தமி­ழர்­கள் அனை­வ­ருமே இந்­திய தேசிய ராணு­வம் பற்றி பேசிக்­கொண்­டி­ருந்­த­தைக் கேட்ட திரு சுதர்­ம­னும் மாமா­வின் விருப்­பத்­துக்கு எதி­ராக அப்­ப­டை­யில் சேர முடி­வெ­டுத்­தார்.

“ஆனால், மாமா ஐஎன்ஏ ஆத­ர­வா­ளர். அவ­ருக்கு அங்கே நண்­பர்­களும் இருந்­த­னர். அத­னால் மாமா­வும் மற்­ற­வர்­களும் ஐப்­பானி­ய­ரின் கொடு­மை­க­ளுக்கு உள்­ளா­க­வில்லை. உண­வுக்கு அவ்­வ­ளவு சிர­மப்­ப­ட­வில்லை,” என்­றார் அவர்.

தொடக்­கத்­தில் சிறார் பிரி­வான ‘பால சேனா’வில் சேர்ந்த சுதர்­மன், 16 வய­தில் ‘காந்தி கம்­பெனி’ எனும் படை­யில் ஒரு சிறு பிரி­வில் தலை­மைப் பொறுப்­பேற்­றார்.

கிட்­டத்­தட்ட 39,000 பேருக்கு பயிற்சி அளித்­தி­ருந்­தா­லும் போரில் ஈடு­படும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்­க­வில்லை.

சிரம்­பா­னில் அமைந்­தி­ருந்த ‘ராஜா’ இந்­திய தேசிய ராணு­வத்­தின் பயிற்சி முக­மா­கில் இருந்­த­போது, 1944ல், சுபாஷ் சந்­தி­ர­போ­ஸைச் சந்­தித்­துப் பேசும் அரிய வாய்ப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது.

அங்கு ஹிந்­தி­தான் புழக்­க­மொழி­யாக இருந்­த­தா­க­வும் அச்­ச­ம­யத்­தில் ஹிந்தி கற்­றுக்­கொண்­ட­தை­யும் குறிப்­பிட்­டார் திரு சுதர்மன்.

“ஜப்­பா­னி­யர்­கள் சர­ண­டைந்து, சந்­தி­ர­போ­ஸும் விபத்­தில் உயிர் இழந்­த­தும் எங்­க­ளுக்கு என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை,” என்ற அவர் கம்­யூ­னிஸ்டு வீரர்­களு­டன் மலைக்­கா­டு­களில் போராளி­யா­கச் செய­லாற்­றி­யதை நினைவு­கூர்ந்­தார்.

“வாழ்­நா­ளில் சொல்­லொ­ணாப் பயங்­க­ரங்­க­ளைக் காடு­களில் பார்த்­தேன். மிக­வும் கொடூ­ர­மான அனு­ப­வங்­கள்,” என்­றார் அவர்.

1957ல் மலாயா சுதந்­தி­ரம் அடைந்­த­தும் போராளி வாழ்க்­கையை விடுத்த திரு சுதர்­மன், 1959ல் சிங்­கப்­பூர் வந்­தார். பின்­னர் இங்­கேயே அவ­ரது வாழ்க்­கையை அமைத்­துக்­கொண்­டார்.

“ஜப்­பா­னி­யர்­கள் சர­ண­டைந்த பிறகு, மீண்­டும் பிரிட்­டிஷ் ஆட்­சியை ஏற்க மக்­கள் மறுத்­த­னர். சுதந்­தி­ரத்­தைப் பற்றி அதி­கம் எண்­ணத் தொடங்­கி­னர். எனவே ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்பு முடி­வில் நல்­லதை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றே நினைக்­கி­றேன்,” என்­றார் திரு சுதர்­மன்.

பிரிட்­டிஷ் ஆட்­சிக்காலத்தில், தமி­ழக மக்­க­ளைக் காட்­டி­லும் அதி­கம் தவித்த மலா­யாத் தோட்டத் தமி­ழர்­க­ளின் நிலை தம்மை கால­னித்­துவ ஆட்­சியை மிக­வும் வெறுக்க வைத்­த­தாக எழுத்­தா­ள­ரும் கவி­ஞ­ரா­க­வும் உள்ள திரு சுதர்­மன் குறிப்பிட்டார்.

போர்க்காலத்தில் வாழ்ந்த நினைவுகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர்களைப் பற்றி மேலும் படிக்க, தொடர்புடைய கதைகளைக் காணவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!