2022ஆம் ஆண்டில் வேலையிட விபத்துகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2020ஆம் ஆண்டில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கையைவிட அது அதிகம். அவற்றில் சில.
பிப்ரவரி 6:
கனரக வாகனத்தின் 56 வயது ஓட்டுநர் ஒருவர் இறங்கும்போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். கெப்பல் முனையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி அவர் மாண்டார்.
பிப்ரவரி 11:
தானியக்க இயந்திரம் நகர்ந்து அதில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழந்தார்.
பிப்ரவரி 11:
உட்லண்ட்ஸ் செக்டர் 2ல் 52 வயது உள்ளூர் துப்புரவாளர் ஒருவர் கார்ப்பேட்டையில் வேலை செய்துகொண்டிருந்தபோது நிலைகுலைந்து விழுந்தார்.
பிப்ரவரி 23:
தெம்பனிஸ் ஸ்திரீட் 64ல் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் கட்டுமானத் தளத்தில் 49 வயது சீன நாட்டவர் ஒருவர், பளுதூக்கி பக்கவாட்டில் சாய்ந்ததால் உயிரிழந்தார்.
மார்ச் 21:
பளுதூக்கி வாகனம் தலைகீழாக சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் பலியானார். பயனியரில் உள்ள லிடா ஓஷனில் மேடு பள்ளமுள்ள இடத்தில் வாகனத்தை அவர் செலுத்திக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.
மார்ச் 28:
30, 42 வயதுடைய இரண்டு பங்ளாதேஷ் ஊழியர்கள் துவாசில் உள்ள கெப்பல் கப்பல் பட்டறையில் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மாண்டனர்.
ஏப்ரல் 1:
ஜூரோங் வெஸ்ட்டில் ஃபர்ஸ்ட் லோக் யாங் ரோடு, லோக் யாங் வே சந்திப்பில் மற்றொரு தனியார் வாகனத்துடன் மோதியதில் தனியார் பேருந்து ஓட்டுநரான 72 வயது சிங்கப்பூரர் மரணமடைந்தார்.
ஏப்ரல் 4:
36 வயது இந்தோனீசிய ஊழியர் ஒருவர், படகை இழுத்துக் கட்டும்போது நிலைதடுமாறி கடலில் விழுந்து உயிரிழந்தார்.
ஏப்ரல் 8:
மார்க்கெட் ஸ்திரீட்டில் உள்ள கேப்பிட்டஸ்பிரிங் கட்டடத்தின் 16வது மாடியில் மேற்பூச்சு விழுந்து சிங்கப்பூரரான 48 வயது பொறியாளர் மரணமடைந்தார்.
ஏப்ரல் 10:
சிங்கப்பூரரான 24 வயது உணவு விநியோகிப்பாளர் ஒருவர், வேன் மோதியதில் மரணமடைந்தார். கம்பாஸ் அவென்யூவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஏப்ரல் 18:
உள்ளூரின் 65 வயது மின்சாரப் பழுதுபார்ப்பாளர் ஒருவர், ஏணியிலிருந்து 1.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தார். தோ பாயோவில் உள்ள ஓர் உணவகத்தில் கண்காணிப்புக் கேமராவை பொருத்திக் கொண்டிருந்தபோது அவர் தவறி விழுந்தார். ஏப்ரல் 27ஆம் தேதி அவர் இறந்தார்.
ஏப்ரல் 21:
செம்பவாங்கில் உள்ள டான் ஹோ கெங் கோயிலில் தொங்கும் அலங்காரங்களை மாட்டிக்கொண்டிருந்தபோது 64 வயது உள்ளூர் ஊழியர் ஏணியிலிருந்து தவறி விழுந்தார். ஏப்ரல் 23ஆம் தேதி அவர் காலமானார்.
ஏப்ரல் 22:
தானா மேராவில் உள்ள வேலையிடத்தில் ஓய்விடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 32 வயது ஊழியர் மீது மற்றொரு வாகனம் ஏறியதில் அவர் உயிரிழந்தார்.
ஏப்ரல் 27:
கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஏறியதில் இந்திய நாட்டைச் சேர்ந்த 39 வயது ஊழியர் மரணமுற்றார். ஈசூன் இண்டஸ்டிரியல் ஸ்திரீட் 1ல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஏப்ரல் 30:
கடும் மழை, காற்று காரணமாக உலோகத் தாங்கிகள் உடைந்த தில் 49 வயது இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் இறந்தார். கொள்கலன் அலுவலகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.