தெஹ்ரான்: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 58 விழுக்காடு அதிகரித்து 388 ஆகி இருப்பதாகவும் அதனால் பலியானோர் எண்ணிக்கை 30 ...
ஈரானில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு
1 Mar 2020 11:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2020 11:07
தெஹ்ரான்: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 58 விழுக்காடு அதிகரித்து 388 ஆகி இருப்பதாகவும் அதனால் பலியானோர் எண்ணிக்கை 30 விழுக்காடு உயர்ந்து 34 ஆகியிருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பிபிசி பெர்ஷியா அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210 என்று தனது செய்தியில் குறிப்பிட்டது உண்மையான தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்