கொரோனா கிருமி பாதிப்பால் 11 வயது சிறுமி மரணம்

இந்தோனீசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரின் மூடப்பட்ட கடைத்தெருவில் நடந்து செல்லும் மக்கள். படம்: இபிஏ

இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 1) தெரிவித்தனர்.

அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த ஆக வயது குறைந்த நபர் அவர்.

அச்சிறுமிக்கு டெங்கி காய்ச்சலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் காய்ச்சலும் சுவாசப் பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதற்கு அடுத்த நாள் அச்சிறுமி உயிரிழந்தார்.

அச்சிறுமிக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது இந்த வாரம்தான் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்தோனீசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களில் 11 மருத்துவர்களும் அடங்குவர். அந்நாட்டில் ஒரே வாரத்தில் உயிரிழப்புகள் கிட்டத்தட்ட மூன்று முடங்காக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,677ஆக கூடியுள்ளது.

#இந்தோனீசியா #கொவிட்-19

இந்தோனீசியா
கொவிட்-19
சிறுமி
மரணம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!