2021ல் முன்னோடித் திட்டம்: வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்துக்குத் திரும்ப அனுமதி

சிங்கப்பூர் இம்மாதம் 28ஆம் தேதி மூன்றாம் கட்டத் தளர்வைத் தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த முன்னோடித் திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சில தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ், மாதம் ஒரு முறை சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

வழக்கமான பரிசோதனை, தொடர்பறியும் சாதனங்களை வைத்திருப்பது, பாதுகாப்பான வாழ்க்கைப் பாணி நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்த ஊழியர்கள் இணங்கி நடப்பதைப் பொறுத்தே இது இருக்கும் என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் இன்று (டிசம்பர் 14) தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 அமைச்சுகள்நிலை சிறப்புப் பணிக்குழு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

தங்கும் விடுதிகளில் வசிக்கின்ற, கட்டுமான இடங்களில், கடல் மற்றும் உணவு பதனீட்டு துறைகளில் வேலை பார்க்கின்ற 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குத் தொடர்பறியும் சாதனங்கள் இம்மாத முடிவில் விநியோகிக்கப்பட்டுவிடும்.

இதையடுத்து இந்த முன்னோடி திட்டம் நடப்புக்கு வருகிறது. சிங்கப்பூர் டிசம்பர் 28ல் மூன்றாம் கட்ட தளர்வைத் தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த முன்னோடித் திட்டம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு ஊழியர்
தங்கும் விடுதி
சிங்கப்பூர்
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!