ஆங்கிலோ-சீனப் பள்ளி (ஜூனியர்) மாணவருக்குக் கிருமித்தொற்று; ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தனிமை உத்தரவு
ஆங்கிலோ-சீனப் பள்ளியில் (ஜூனியர்) தொடக்கநிலை 6ல் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அந்த மாணவருடன் அணுக்கமான தொடர்பில் இருந்த அவரின் வகுப்பு நண்பர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறியப்படுகிறது.
பள்ளிக்கு வெளியே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த அந்த மாணவர், கடைசியாக திங்கட்கிழமை (மே 17) பள்ளிக்குச் சென்றிருந்தார்.
அந்த மாணவருடன் ஒரே வகுப்பில் படித்த மாணவர்களின் பெற்றோருடன் சுகாதார அமைச்சு தொடர்புகொண்டு அவர்களுடைய பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களின் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் செல்வர் என்றும் அவர்கள் ஹோட்டல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்படக் காத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் ஒருவர் பகிர்ந்துகொண்ட தகவலின்படி, அக்குறிப்பிட்ட வகுப்பில் 31 மாணவர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
தமக்கு வழங்கப்பட்ட கடிதம் ஒன்றில், தம்முடைய மகன் திங்கட்கிழமை தொடங்கி மே 31 வரை கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும் என்றும் அந்த காலத்தில் வீட்டிலேயே முடிந்த வரை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. திங்கட்கிழமை,
செவ்வாய்க்கிழமை இரு தினங்களிலும் அரையாண்டுத் தேர்வு காரணமாக தம் மகன் பள்ளிக்குச் சென்றதாகவும் அந்த பெற்றோர் கூறினார்.
இதற்கிடையே, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது என்று பள்ளி தெரிவித்துள்ளது.