தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

சென்னையில் கொவிட்-19 நோயாளிகளுக்கான தற்காலிக தனிமைப்படுத்தும் மையத்தில் படுக்கைகளைத் தயார்செய்யும் ஊழியர். படம்: ஏஎஃப்பி

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது.

தற்போது நடப்பில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடனும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 22) ஆலோசனை நடத்தினார்.

மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டது.

ஊரடங்கை நீட்டிக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவும் ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து, நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம்
ஊரடங்கு
கொவிட்-19
கட்டுப்பாடுகள்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!