கொவிட்-19 திட்டங்கள் குறித்து பிரதமர் உரையின் ஆறு முக்கிய அம்சங்கள்
கொவிட்-19 கிருமியுடன் மக்கள் தங்களது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக சிங்கப்பூர் புதிய இயல்புவாழ்க்கைக்குத் திட்டமிட்டு வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று (மே 31) தெரிவித்து இருந்தார். அவரது உரையின் ஆறு முக்கிய அம்சங்கள் இதோ:
♦ சமூகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் பட்சத்தில், ஜூன் 13க்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
♦ ஒருவர் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்விதமாக, எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ‘சுயபரிசோதனைக் கருவிகள்’ விரைவில் மருந்தகங்களில் விற்பனைக்கு வரும்.
♦ வேலையிடம் அல்லது சமூகம் போன்ற இயல்பான சூழல்களில், நலமாக இருப்போரும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
♦ கொரோனா தொற்றிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
♦ மாணவர்கள் இன்று முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.
60 வயதும் அதற்கும் மேற்பட்டோர், முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
♦ சிங்கப்பூரர்கள் கொவிட்-19 கிருமியுடன் வாழத் தயாராக வேண்டும்.