கொவிட்-19 தொற்று விகிதம் சற்று கூடியது; புதிதாக 389 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு
சிங்கப்பூரில் நேற்றைய (ஜனவரி 10) நிலவரப்படி கொவிட்-19 வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 1.83ஆகப் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த விகிதம் 1.80ஆகப் பதிவானது.
மேலும், புதிதாக 389 பேருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கையும் ஞாயிற்றுக்கிழமை பதிவானதைவிட அதிகம்.
புதிதாக 750 பேருக்கு கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு பதிவாகியது. இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை பதிவானதைவிட கிட்டத்தட்ட 100 குறைவு. கிருமித்தொற்றால் புதிதாக எவரும் மரணமடையவில்லை.
கொவிட்-19 தொற்று உறுதியானவர்களில் 487 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். 263 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது.
ஓமிக்ரான் பாதிப்பில் 126 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது, 263 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 47.1 விழுக்காடு படுக்கைகள் கொவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.