புதுடெல்லி: நாட்டின் பிரதமராக மோடி மிக விரைவில் மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இம்முறை தேர்வான எம்பிக்க ளில் 475 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். மொத்தமுள்ள 543 மக்க ளவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களம் கண்ட அனைவரும் வேட்புமனு வுடன் சொத்து விவரங்களையும் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
இவர்களில் பாஜகவை சேர்ந்த வர்கள் 265. அக்கட்சியில் உள்ள எம்பிக்களில் 88 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள்.
காங்கிரஸ் எம்பிக்களில் 43 பேர், திமுகவைச் சேர்ந்த 23 எம்பிக்களில் 22 பேர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் 20 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரசில் 19 பேர் என்று ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்போரின் பட்டி யல் நீளமாக உள்ளது.
அதிக சொத்துள்ளவர்களின் பட்டியலில் பாஜகவினரை காங்கி ரஸ் எம்பிக்கள் முந்தியுள்ளனர். கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்த குமார் ரூ.417 கோடி சொத்து
களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே மொத்தமுள்ள புதிய எம்பிக்களில் 43 விழுக்காட்டி னர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள உறுப்பினர்களில் 300க்கும் மேற் பட்டவர்கள் புதுமுகங்கள் ஆவர்.