முஹம்மது ஃபைரோஸ்
பல இனங்கள், பல சமயங்கள் மதிப்புடன் வாழும் சிங்கப்பூரில் பல்வேறு சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த அரசாங்க, சமூகத் தரப்புகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்குள்ள உயர்கல்வி நிலையங்களில் உள்ளூர் மாணவர் களுடன் கணிசமான எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களும் பயிலும் சூழல் தற்போது சாதாரணமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு உள்ளூர், வெளிநாட்டு மாணவர்களிடையே புரிந்துணர்வையும் தொடர்பையும் வலுப்படுத்தும் நோக்கில் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி 'பன்முகத்தன்மை. உள்ளடக்குதல். நீங்கள்' (DIY) எனும் நிகழ்ச்சியை கடந்த ஜூன், செப்டம்பர் மாதங்களில் நடத்தியது. இதில் பங்கேற்க சிங்கப்பூரின் ஜந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலிருந்து சுமார் 200 மாணவர்கள் பரிந்துரைக்கப்பட் டனர். தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அமைந்துள்ள 'குளோபல் கனெக்ட் வில்லேஜ்'ஜில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிலரங்குகள், சமூகத் திட்டங்கள் போன்ற பயிற்சி அங்கங்களில் அவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி நந்தினி மதிவாணன், 18. பயிற்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிற கலாசாரங்களைப் பற்றிய விழிப்புணர்வும் புரிதலும் அதிகரித்ததாகக் கூறிய நந்தினி, எதையும் தீவிரமாக ஆராயாமல் ஊகத்தின் அடிப்படையில் எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். சமுதாயத்தில் மூத்த ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரித்து, நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக மூத்த துப்புரவாளர்களுக்கு மதிய உணவு பரிமாறினர் மாணவர்கள்.
'பன்முகத்தன்மை. உள்ளடக்குதல். நீங்கள்' எனும் நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மூத்த துப்புரவாளர்களுக்குப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் மதிய உணவு பரிமாறினர். பச்சை டீ=சட்டை அணிந்து நின்றவாறு முதல் மேசையில் உணவு பரிமாறுகிறார் நந்தினி மதிவாணன். படம்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி