சென்னை: சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனின் தொழில் கூட்டாளியான லட்சுமி நாராயணனின் பண்ணை வீட்டில் இருந்து 232 பழங்கால சிலைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரு தினங்களாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் மாமல்லபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது 82 உலோக சிலைகள், 103 கற்சிலைகள், 47 மரச்சிற்பங்கள் என 232 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் பறிமுதல் செய்தனர். இவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இது தொடர்பாக லட்சுமி நாராயணனிடம் விசாரணை நடப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.