இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆடவர் ஒருவருக்குப் பிணை கிடைத்தும் அவர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து எட்டு மாதங்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிணை ஆணையில் அவரது பெயரின் ஒரு பகுதி இடம்பெறவில்லை என்பதற்காக அவருக்கு இந்த அவலநிலை ஏற்பட்டது.
பிணை ஆணையில் வினோத் குமார் பாருவாருக்குப் பதிலாக வெறும் வினோத் பாருவார் என்று குறிப்பிடப்பட்டதை அடுத்து,
அந்தக் கைதியை சித்தார்த்நகர் மாவட்ட சிறைக் கண்காணிப்
பாளர் ராகேஷ் சிங் விடுவிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, பிணை ஆணையில் தமது முழு பெயரைக் குறிப்பிட வினோத் பாருவார் விண்ணப்பித்தபோது சிறைக்
கண்காணிப்பாளருக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
சிறு விஷயத்துக்காக பிணை கிடைத்தும் வினோத் பாருவாரை விடுவிக்க மறுத்த சிறைக் கண்காணிப்பாளரை நீதிபதி சாடினார்.
அவ்வாறு அவரைச் சிறையில் தொடர்ந்து வைத்திருந்தது சட்டத்துக்கு விரோதமானது என்று நீதிபதி தெரிவித்தார்.
இனி இவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது என்றும் பிணைக்கான அனுமதி வழங்கப்பட்டதும் சம்பந்தப்பட்டவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.