புதுடெல்லி: மத்திய அரசின் திறனற்ற நிர்வாகத்தாலும் அலட்சியப் போக்காலும் நாடு மீண்டும் ஒரு முழு ஊரடங்கைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அதனைத் தவிர்க்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடமறிதல், தடுப்பூசி நடவடிக்கையை விரைவுபடுத்துதல், தடுப்பூசிகளின் செயல்திறனை மதிப்பிடுதல், கண்டறியப்படும் முடிவுகளை வெளிப்படையாக அறிவித்தல் ஆகியவை தொடர்பில் நான்கு ஆலோசனைகளையும் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காணொளி வாயிலாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.