திருவனந்தபுரம்: நிஃபா கிருமித்தொற்று தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிஃபா பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட வௌவால்கள் சாப்பிட்ட பழம், அவற்றின் எச்சம் மற்றும் எச்சில் போன்றவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நிஃபா கிருமித் தொற்றால் உயிரிழந்த சிறுவனின் வீடு அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 15,000 வீடுகளில் குடியிருக்கும் 68,000 பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் யாருக்கும் நிஃபா தொடர்பான அறிகுறி தென்பட வில்லை எனவும் முதல்வர் விஜயன் தெரிவித்தார்.
விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள், மாணவர்களின் பெற்றோர் போன்றோர் கட்டாயமாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.