நிஃபா கிருமி: 68,000 பேரிடம் விவரம் சேகரிப்பு

திருவனந்தபுரம்: நிஃபா கிருமித்தொற்று தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிஃபா பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட வௌவால்கள் சாப்பிட்ட பழம், அவற்றின் எச்சம் மற்றும் எச்சில் போன்றவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நிஃபா கிருமித் தொற்றால் உயிரிழந்த சிறுவனின் வீடு அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 15,000 வீடுகளில் குடியிருக்கும் 68,000 பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் யாருக்கும் நிஃபா தொடர்பான அறிகுறி தென்பட வில்லை எனவும் முதல்வர் விஜயன் தெரிவித்தார்.

விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள், மாணவர்களின் பெற்றோர் போன்றோர் கட்டாயமாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!