இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் நகரில் சிறுத்தை ஒன்று பள்ளிக்குள் புகுந்து ஒரு மாணவரைத் தாக்கியது.
இச்சம்பவம் டிசம்பர் 1ம் தேதி புதன்கிழமை நிகழ்ந்தது.
மாணவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
சிறுத்தை வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருந்தைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டதாக மாணவர் கூறினார்.
ஆனாலும் சிறுத்தை அவரை முதுகிலும் கையிலும் கடித்ததாக அவர் கூறினார்.
11 மணி நேரம் முயன்ற பின்னர், அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்தனர்.
அந்த ஐந்து வயது சிறுத்தை, அருகில் இருந்த சிறிய காட்டிலிருந்து வழிதவறி பள்ளிக்குள் வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.