புதுடெல்லி: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 22 லட்சத்து 54,000 பேர் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஏறக்குறைய 22 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் மன்சுக் மாண்டவியா கூறுகையில், "புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக, உயர்ந்து வரும் மக்கள் தொகை, அமர்ந்த நிலையிலான வாழ்க்கை முறை, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துதல், மது அருந்துதல், காற்று மாசுபாடு ஆகிய காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது.
"இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 40,75,826 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 22,54,886 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.
"ஆரோக்கிய நடவடிக்கைகள், தகவல் தொடர்புகளை மேம்படுத்து வதன் மூலம் புற்றுநோயைத் தடுக் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.