தரண்ஜித் சிங் சாந்து: அமெரிக்காவில் கல்வி கற்கும் இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள்
வாஷிங்டன்: பிரதமா் நரேந்திர மோடி-அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு இடையே நடக்க விருக்கும் சந்திப்பில் ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட இருப்பதாக அமெரிக்கா வுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து தெரிவித் துள்ளார்.
பிரதமா் மோடி நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது அவர், அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசு வதுடன், அமெரிக்க நாடாளு மன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் தரண்ஜித் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மோடி-பைடன் பேச்சுவார்த்தையில் சுகாதாரம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு ஆகிய ஐந்து அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தொழில்நுட்பம் என்பது வணிகம் சார்ந்தது மட்டுமல்ல; அதில் தேசப் பாதுகாப்பும் ஒருங்கிணைந்துள்ளது. இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள ஒத்துழைப்பும் நம்பிக்கையும் அவசியம். இதனை இரு நாடுகளும் பரஸ்பரம் கொண்டுள்ளன.
“மருத்துவ வசதிகள், மருந்து கள், தடுப்பூசி ஆகியன மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்வது தொடா்பாகவும் இருநாட்டுத் தலைவா்களும் விவாதிக்க உள்ளனா்.
“அமெரிக்காவில் ஏறக்குறைய இரண்டு லட்சம் இந்திய மாண வர்கள் உயர்கல்வி பயின்று வரும் சூழலில், கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாகத் தலை வர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். பிரதமர் மோடியின் இப்பயணம் இருதரப்பு உறவில் மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்,’’ என்று கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் சூரிய எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தரண்ஜித் சிங் தெரிவித்தார்.
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நாளை மறுநாள் 21ஆம் தேதி நடக்கும் அனைத்துலக யோகா தின நிகழ்வில் 180 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.