மும்பை: இந்தியாவில் உள்ள 74 விழுக்காடு மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலையும் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை 65 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், ஆனால், ஊதியம் 28 முதல் 37 விழுக்காடு வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாற இந்தியா நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
ஆனால் இதுபோன்ற சிக்கல்கள்களால் அதன் வளர்ச்சியில் சில சவால்கள் எழுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.