ஸ்ரீநகர்: இந்தியாவின் மத்திய அரசு நடைமுறைப்படுத்திவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் இருக்கும் மொத்தம் 6,650 கிராமங்கள் அனைத்திலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன.
அவை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சுவதற்காக மொத்தம் சுமார் 4 லட்சம் குழாய்கள் அமைக்கப்பட்டன.
குப்பைகளை அழிக்க 150,000 சமுதாய குப்பை குழிகள் அமைக்கப்பட்டன. கழிவுகளை முறையாக அகற்ற 1,850 மையங்கள் உருவாக்கப்பட்டன.
இப்போது ஜம்மு காஷ்மீர் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பிரதேசம் என்ற நிலையை எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.