பயிற்சிக்குச் செல்லாத ஆசிரியர்கள் எதிராக ஒழுங்கு நடவடிக்கை

திருவனந்தபுரம்: பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாத அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராகக் கல்வித் துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

ஜனவரி 27ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்க் குழுமப் பயிற்சியில் கீழ்த்தொடக்கநிலை, மேல்தொடக்கநிலை, உயர்நிலை என 134,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பதாக இருந்தது.

இருப்பினும், 30,000 ஆசிரியர்கள் பயிற்சிக்குச் செல்லவில்லை.

இவர்களின் விவரங்களைத் திரட்டிய கல்வித் துறையினர், வரும் பிப்ரவரி 17ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படும் அடுத்த பயிற்சி வகுப்பில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இல்லையேல், கேரள கல்விச் சட்ட விதிமுறைகளை மீறியதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, 2023ஆம் ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளிலும் பலர் கலந்துகொள்ளவில்லை என்று அறியப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!