திருவனந்தபுரம்: பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாத அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராகக் கல்வித் துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
ஜனவரி 27ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்க் குழுமப் பயிற்சியில் கீழ்த்தொடக்கநிலை, மேல்தொடக்கநிலை, உயர்நிலை என 134,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பதாக இருந்தது.
இருப்பினும், 30,000 ஆசிரியர்கள் பயிற்சிக்குச் செல்லவில்லை.
இவர்களின் விவரங்களைத் திரட்டிய கல்வித் துறையினர், வரும் பிப்ரவரி 17ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படும் அடுத்த பயிற்சி வகுப்பில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இல்லையேல், கேரள கல்விச் சட்ட விதிமுறைகளை மீறியதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, 2023ஆம் ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளிலும் பலர் கலந்துகொள்ளவில்லை என்று அறியப்படுகிறது.