சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை ஏற்றுமதி செய்யவிருக்கும் இந்தியா

புதுடெல்லி: சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அமைப்புடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு அந்நாட்டின் ஐந்து முன்னணி கூட்டுறவு அமைப்புகளுக்குச் சொந்தமானது.

“கூடிய விரைவில் மேலும் 2,000 டன் அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஏப்ரல் மாதத்தில் கப்பல் மூலம் அரிசி அனுப்பிவைக்கப்படும்,” என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அரிசி பற்றாக்குறை ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு ரூ. 1,325 கோடி மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு இதுவரை 250 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக திரு மேத்தா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!