இந்தியா

ஸ்ரீநகர்: இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: முந்நூற்றுக்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான காணொளிகள் வெளியான நிலையில், தேவகவுடாவின் பேரனும் ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஆறு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
லக்னோ: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும் என்று டிம்பிள் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.