இந்தியா

கன்னியாகுமரி: தென்தமிழகத்தில் புயல் சுழற்சியின் தாக்கத்தால் கேரளத்தில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம், கொச்சி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள், சாலைகள், வீடுகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹோபா: உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவியும் அவரைச் சேர்ந்தவரும் சுடப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மும்பாய்: கற்களை வீசி சிறுத்தையை விரட்டி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார் தாய். இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் ஜுன்னர் வனப்பகுதியை அடுத்த தார்ன் டேல் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்துள்ளது.
பிரயாக்ராஜ்: நொய்டாவின் நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தரும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.