மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு

மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு

1 mins read

பதி­மூன்­றா­வது ஆண்­டாக வழங்­கப்­படும் மு.கு. இரா­மச்­சந்­திரா நினைவு புத்­த­கப் பரி­சுப் போட்­டி­யின் பரி­ச­ளிப்பு விழா வரும் 28ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.

சிறு­கதை, கவிதை, கட்­டுரை என மூன்று துறை­க­ளுக்­குச் சுழல் முறை­யில் ஆண்­டு­தோ­றும் பரிசு வழங்­கப்­பட்டு வரும் இப்­போட்­டி­யில் இந்த ஆண்டு சிறு­கதை நூலுக்­குப் பரிசு வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம், ஆனந்த பவன் உண­வ­கத்­தின் ஆத­ர­வு­டன் அப்­ப­ரிசை வழங்கி வரு­கிறது.

அந்த உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ராக இருந்த மறைந்த திரு மு.கு. இரா­மச்­சந்­திரா, தமிழ் ஆர்­வ­லர் ஆவார். தமிழ் நிகழ்ச்­சி­க­ளுக்­கு ஆத­ரவு வழங்­கி­ய­வர் அவர். அவ­ரது நினை­வாக புத்­த­கப் பரிசு வழங்­கப்­பட்டு வருகிறது.

சையது ஆல்வி ரோட்­டில் உள்ள ஆனந்த பவன் உண­வ­கத்­தின் மேல் மாடி­யில் பர­ச­ளிப்பு விழா மாலை 4 மணிக்­குத் தொடங்­கும்.

விழா­வில் சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் மதி­யு­ரை­ஞ­ரு­மான முனை­வர் சுப. திண்­ணப்­பன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொள்­வார்.

நடு­வர்­களில் ஒரு­வ­ரான சிங்கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­ க­ழக இணை விரி­வு­ரை­யா­ளரான முனை­வர் சரோ­ஜினி செல்லக்­கிருஷ்­ணன் நடு­வர்­க­ளின் கருத்து­ க­ளை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்­வார்.