வரும் நவம்பர் மாதம் புதிய சிங்டெல் நீர்முகப்பு அரங்கம் திறக்கப்படும்போது 'கிங்டம்ஸ் அபார்ட்' எனும் நாடகம் அரங்கேறவிருக்கிறது. எஸ்பிளனேட்டின் ஆதரவில் இந்த நாடகம் அரங்கேறும்.
மகாபாரதத்தில் இடம்பெற்ற சூதாட்டம் சகோதரர்களான பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே கடும் போர் நிகழக் காரணமானதைக் கருவாகக் கொண்டது இந்த நாடகம்.
சிங்கப்பூர் நாடக ஆசிரியரும் இயக்குநருமான சோங் ட்சே சியன் இதனைத் தயாரிக்கிறார். புதுமையான முறையில் இது அரங்கேறும் என்று அவர் கூறுகிறார்.