மலேசியாவில் கடத்தப்பட்ட நபர் மீட்கப்பட்டார்

மலேசியாவின் கெடா பகுதியில் பட்டப்பகலில் ஆடவர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார், அவர் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடத்தலுக்குள்ளான 28 வயது ஆடவர் எதற்காகக் கடத்தப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  

கடத்தல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) மாலை மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளார். 

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ரத்தத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபனமாகியுள்ளது. 

ஆடவர் கடத்தப்படும் காணொளி சமூக ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 41 நொடிகள் ஓடும் அந்த காணொளியில் ஆடவர் கத்துவதும் அவரை காரின் பின் இருக்கையில் சந்தேக  நபர்கள் தள்ளுவதும் பதிவாகியிருந்தது. 

கடத்தல் சம்பவம் ஹோட்டல் ‌‌ஷஹாப் பெர்டானா முன் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) மாலை 6:30 மணிவாக்கில் நடந்ததாக அதிகாரிகள் கூறினர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!